அதிரடி…சிறுமிக்கு பாலியல் தொல்லை;இளைஞருக்கு 70 ஆண்டுகள் சிறைத்தண்டனை – நீதிமன்றம் தீர்ப்பு!

திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை அருகே போடிபட்டி பகுதியை சேர்ந்த 7 ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமிக்கு,கடந்த 2020 ஆம் ஆண்டில் நவரசன் என்ற இளைஞர் பாலியல் தொல்லை கொடுத்தும்,அதனை செல்போனில் வீடியோவாக எடுத்ததும் வந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பில் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து,சிறுமி தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் இளைஞரை போக்சோ சட்டத்தின்கீழ் கைது சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில்,இது தொடர்பான வழக்கு, மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில்,சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞருக்கு 70 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. மேலும்,அவருக்கு ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.