அதிரடி சோதனை.! போலி மதுபான தொழிற்சாலைக்கு போலீசார் சீல் வைப்பு.!

  • காரைக்காலில் உள்ள ஒரு வீட்டில் இயங்கி வந்த போலி மதுபான தொழிற்சாலையை காவல்துறையினர் கண்டுபிடித்து சீல் வைத்தனர்.
  • நூற்றுக்கணக்கான அட்டை பெட்டிகளில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

புதுச்சேரி யூனியனில் காரைக்கால் புறவழிச்சாலை தீன்ஸ் பார்க் பகுதியில் அருகே ஒரு வீட்டில் சட்ட விரோதமான போலி மதுபான தொழிற்சாலை இயங்கி வருவதாக துணை ஆட்சியருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, கலால் மற்றும் காவல்துறையினர், அந்த வீட்டிற்கு விரைந்து சென்று அதிரடி சோதனையை நடத்தினர். அப்போது அந்த வீட்டில் 100க்கும் மேற்[பட்ட அட்டை பெட்டிகளில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் அடுக்கி ஒரு பெட்டியில் வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதை பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், அந்த அறையில் போலி மதுபானம் தயாரிக்கும் இயந்திரங்கள், ஹோலோகிராம்கள், ஸ்டிக்கர்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேரை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்