அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு
புதுச்சேரி சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு மார்ச் மாதத்தில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். மேலும் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி மூலம் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.