நாடு முழுவதும் கடந்த ஒரே நாளில் 14,313 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு;549 பேர் இறப்பு..!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,313 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 549 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,42,60,470 ஆக உள்ளது.

  • கடந்த 24 மணி நேரத்தில் 14,313 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பை விட 35 குறைவு.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,42,60,470 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 549 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,57,740 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • தொற்றில் இருந்து ஒரே நாளில் 13,543 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,36,41,175 ஆக உயர்ந்துள்ளது.
  • இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,61,555 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • நாடு முழுவதும் இதுவரை 1,05,43,13,977 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த ஒரே நாளில் 57 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.