கீழடி அகழாய்வில் 15,000 பொருட்கள் கிடைத்துள்ளன – அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 6ம் கட்ட அகழாய்வுப் பணி சமீபத்தில் தொடங்கியது. கீழடியைச் சுற்றியுள்ள கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட 4 இடங்களில் அகழாய்வு பணிகள் செய்யப்படுகிறது. கீழடியின் தொடர்ச்சியான அகழாய்வில் ஈமக்காட்டை அகழாய்வு செய்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 6ம் கட்ட அகழாய்வில் தற்போது வரை 8 தாழிகள், 5 பானைகள், 3 சுடுமண் குடுவைகள் உள்ளிட்ட 15,000 பொருட்கள் கிடைத்துள்ளன என்றும் அகழாய்வில் கிடைத்த பொருட்கள் அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார். 

மேலும் கீழடியில் நடைபெறும் அகழாய்வில் கண்டறியப்பட்டுள்ள கட்டுமான சுவரின் தொடர்ச்சியாகவே இது இருந்திருக்கின்றது என்று அகழ்வாராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். இது முழுவதும் செங்கற்களால் ஆன கட்டுமானச் சுவர் மற்றும் வட்ட வடிவிலான பானை போன்ற அமைப்புகளும் கண்டறியப்பட்டுள்ளன என தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்