செல்போனில் வீடியோவை பார்த்து குழந்தை பெற்றெடுக்க முயன்ற இளம்பெண் பலி!!!!

  • கடந்த நான்கு நாட்களுக்கு முன் அவர் பிலாந்த்பூர் பகுதிக்கு குடிபெயர்ந்து உள்ளார்.
  • அங்கு வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார்.
  • அந்த இளம்பெண் மற்றும் அவரது குழந்தை ரத்ததுடன் இறந்து கிடைத்தனர். 
  • அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

உத்தர பிரதேசத்தில் உள்ள பஹ்ரைச் பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர் போட்டி தேர்வுகளுக்கு  படித்து வருகிறார். இதற்காக கடந்த நான்கு வருடங்களுக்கு முன் கோரக்பூருக்கு சென்றுள்ளார்.

கடந்த நான்கு நாட்களுக்கு முன் அவர் பிலாந்த்பூர் பகுதிக்கு குடிபெயர்ந்து உள்ளார்.  அங்கு வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார்.

இந்நிலையில் அவரது அறையில் இருந்து கதவு வழியே ரத்தம் வெளியே வந்துள்ளது. இதை பார்த்த அக்கம்பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு போலீசார் வந்தனர்.அங்கு அந்த இளம்பெண் மற்றும் அவரது குழந்தை ரத்ததுடன் இறந்து கிடைத்தனர். மேலும் அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
செல்போன் வழியே குழந்தை பெற்று எடுக்கும் வீடியோவை பார்த்து தனது குழந்தையை பெற்றெடுக்க அவர் முயற்சித்து உள்ளார்.இதனால் 2 பேரும்
பலியாகி உள்ளனர்.
அவரது பெற்றோர்கள் புகார் எதுவும் அளிக்காத நிலையில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படவில்லை. அவர் யாருடன் தொடர்பில் இருந்தார் என்ற விவரத்தினையும் அவரின் பெற்றோர் கூறவில்லை என போலீசார் கூறி உள்ளனர்.
author avatar
murugan

Leave a Comment