காதல் திருமணத்தால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட இளைஞன்..!

கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணம் செய்த இளைஞர், பெண் வீட்டாரால் நடுரோட்டில் வெட்டிக்கொலை

கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணம் செய்த இளைஞர், பெண் வீட்டாரால் நடுரோட்டில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெகன் என்ற இளைஞர், சரண்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

இளைஞன் வெட்டிக்கொலை 

இந்த நிலையில், கே.ஆர்.பி. அணை அருகே பைக்கில் சென்ற கிட்டம்பட்டியை சேர்ந்த ஜெகனை (28), பெண் வீட்டார் சுற்றி வளைத்து வெட்டிக்கொலை செய்துள்ளார்.

இதில் சம்பவ இடத்திலேயே இளைஞர் உயிரிழந்தார். நடுரோட்டில் துடிக்க துடிக்க கழுத்தை அறுத்து கொன்ற பெண்ணின் உறவினர்கள் தப்பிச்சென்ற பெண்ணின் தந்தை மற்றும் உறவினர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment