கட்சிக்குள் சனாதானம் இருக்கிறது.! திருமாவளவன் முன் கொந்தளித்த பெண்.! மைக் ஆஃப்.. மேடையில் பரபரப்பு.!

சில மாவட்டங்களில் பெண்களுக்கு எதிரான நிலை தொடருகிறது. சனாதனத்தை நாம் எதிர்க்கிறோம். ஆனால் இந்த கட்சிக்குள் சனாதானம் இருக்கிறது. – விசிகி பெண் நிர்வாகி மேடையில் குமுறல்.

சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில், திருமாவளவன் மணிவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டார். இதில் பெண் நிர்வாகியான மகளிர் விடுதலை இயக்க மாநில செயலாளர் பேசினார்.

அவர் பேசுகையில், திருமாவளவன் பெயரை சொன்னாலே ஆண்கள் அணிதிரண்டு விடுகிறார்கள். ஆனால், பெண்கள் அணியை திரட்டுவது கடினமாக இருக்கிறது. அதற்கு மாவட்ட நிர்வாகிகளே தடையாய் இருக்கின்றனர்.

உங்களுக்கு என்ன என கேவலமாக எங்களை திட்டுகிறார்கள். அதையெல்லாம் நான் ரெக்கார்ட் செய்து வைத்துள்ளேன். சென்னையில் அது போல இல்லை. ஆனால், மற்ற சில மாவட்டங்களில் பெண்களுக்கு எதிரான இந்த நிலை தொடருகிறது. சனாதனத்தை நாம் எதிர்க்கிறோம். ஆனால் இந்த கட்சிக்குள் சனாதானம் இருக்கிறது.

மேற்கண்டவாறு விசிக பெண் நிர்வாகி திருமாவளவன் இருக்கும்போதே மேடையில் பேசினார். பெண் நிர்வாகி பேசிக்கொண்டிருக்கும் போதே மைக் ஆஃப் செய்யப்பட்டது. இதனால், மேடையில் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் விசிக தலைவர் திருமாவளவன் பேசினார்.

 அவர் பேசுகையில், சனாதனத்தை மெல்லவும் வேண்டாம். முழங்கவும் வேண்டாம். சனாதனமே வேண்டாம் என்று  துப்பிவிடுங்கள் என பேசினார்

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment