தமிழில் மீண்டும் பிஸியான இசைபுயல் ஏ.ஆர்.ரகுமான்!

ஏ.ஆர்.ரகுமான் புகழ் பெற்ற இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்தி, தமிழ்,ஆங்கிலம் போன்ற பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் இசைப்புயல் என அழைக்கப்படுகிறார். ஆஸ்கர் விருது ,தேசிய திரைப்பட விருது, போன்ற புகழ் பெற்ற விருதுகளைப் பெற்றவர்.

இந்த வருடம் A R ரகுமான் இசையில் ஜி.வி பிரகாஷ் நடித்த சர்வம் தாளமயம் திரைப்படம் வெளியாகியானது. அதனை அடுத்து தற்போது தளபதி விஜய் -அட்லி கூட்டணியில் பிகில் திரைப்படத்திற்கு A R ரகுமான் இசை அமைத்து வருகிறார். இந்த திரைப்படம் தீபாவளி அன்று வெளியாக உள்ளது.

இது போக சிவகார்த்திகேயன் நடிக்கும் 14 வது படம், விக்ரம்58 படம், உலக நாயகன் கமலஹாசன் இயக்கி நடிக்க உள்ள தலைவன் இருக்கிறான் ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

 

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.