திருச்சியில் பிரபல ரவுடி வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு..!

திருச்சிமாவட்டம் திருவானைக்காவலில் ரவுடி வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரவுடி மணிகண்டன் மீது கடந்த 2021-ஆம் ஆண்டு, ஆட்டோ ட்ரைவர் முருகன் என்பவரை கொலை செய்த வழக்கு உள்ளது.

இந்த நிலையில், இந்த கொலை சம்பவத்தில் மணிகண்டனின் எதிரிகள் அவரை தாக்குவதற்கு பல வகைகளில் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. தற்போது இந்த நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவமும் அவரை பழிவாங்கும் நடவடிக்கை தான் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், அவரது வீட்டின் அருகே கறி கடை மற்றும் சில கடைகள் உள்ளது. இந்த நிலையில், வீட்டிற்குள் இருக்க கூடிய மணிகண்டன் தாக்குதலுக்கு உள்ளாக வேண்டும் என்ற முனைப்பில் தான் இந்த நாட்டு வெடிகுண்டு அவரது வீட்டில் வீசப்பட்டுள்ளது.

இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர், அடையாளம் தெரியாத 3 பேர் நாட்டு வெடிகுண்டு வீசி சென்றதை கண்டறிந்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில், முருகனின் ஆதரவாளர்களிடம் விசாரணை நடத்த போலீசார் விசாரணை நடத்த  திட்டமிட்டுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.