சீனாவில் உள்ள ஹெய்லாங்ஜியாங் மாகாணத்தை சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது.இதைத்தொடர்ந்து அந்த கர்ப்பிணி பெண்ணை தலைநகர் ஹர்பினில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு கடந்த 30-ம் தேதி ரத்த பரிசோதனை செய்ததில் கொரோனா வைரஸ் தாக்கியது உறுதியானது. பின்னர் மருத்துவர்கள் குழந்தைக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாமல் இருக்க உடனடியாக ஆபரேஷன் செய்து குழந்தையை எடுக்க முடிவு செய்தனர்.
பின்னர் அன்றே மருத்துவர்கள் ஆபரேஷன் மூலம் அந்த கர்ப்பிணிக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் எடை 3 கிலோவாகவும் இருந்தது. அடுத்த மறுநாள் 31-ம் தேதி குழந்தைக்கு மருத்துவர்கள் ரத்த பரிசோதனை செய்ததில் கொரோனா வைரஸ் தாக்கவில்லை என உறுதி செய்யப்பட்டது. தற்போது தாயையும், சேயையும் தனிவார்டில் வைத்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். குழந்தை பிறந்த பிறகு தாய்க்கு உடல் வெப்ப நிலை குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது வரை கொரோனா வைரஸ் பெய்ஜிங் , ஷாங்காய் ,ஹூபே போன்ற பல நகரங்களில் பரவி உள்ளது. கொரோனா வைரசால் பலியானோர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து கொண்டு வருகிறது.
இந்த கொரோனா வைரஸ் தாக்கியதில் இதுவரை சீனாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 425 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல இந்த வைரசால் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளதாக சீனா அரசு அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.
Covaxin : எங்கள் தடுப்பூசியில் பக்க விளைவுகள் இல்லை என கோவாக்சின் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. 2019ஆம் ஆண்டு முதல் சுமார் 2 வருடங்கள்…
Gold Price: தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.800 குறைந்ததால் மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக…
Weather Update : தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி…
Kollam Express: விருத்தாச்சலம் அருகே கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி பெண் பரிதாப பலியாகியுள்ளார். சென்னையில் இருந்து கொல்லம் விரைவில் ரயிலில் சென்ற…
Champions Trophy : பாகிஸ்தானில் நடக்கவிருக்கும் சாம்பியன்ஸ் ட்ரோபியில் கலந்து கொள்ளும் இந்திய அணியின் போட்டிகளை எல்லாம் ஒரே மைதானத்தில் நடத்த திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.…
Aranmanai 4 : சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 திரைப்படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு அயலான், கேப்டன்…