அதிர்ச்சி சம்பவம்…பாலியல் ரீதியான உறவில் ஈடுபட மறுத்த 19 வயது மாணவி;சக மாணவர்களால் கொலை!

ராஜஸ்தான்:சக மாணவர்களுடன் பாலியல் ரீதியான உறவில் ஈடுபட மறுத்த 19 வயது மாணவிக்கு விஷம் கொடுத்து கொலை.

ராஜஸ்தான் மாநிலத்தின் பரத்பூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படிக்கும்  19 வயது கல்லூரி மாணவியை தங்களுடன் பாலியல் ரீதியான உறவில் ஈடுபட மறுத்ததற்காக அவரது வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் 5 பேர் விஷம் கொடுத்து கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. தங்களுடன் பாலியல் உறவு கொள்ளுமாறு மாணவர்கள் வற்புறுத்திய நிலையில்,அதனை மாணவி மறுத்ததால்,அவருக்கு விஷம் கொடுத்துள்ளனர்.இதனால் மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து,பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை ஹலேனா காவல் நிலையத்தில் அளித்த புகாரின்படி,இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 306 (தற்கொலைக்குத் தூண்டுதல்), 328 (விஷம் கொடுத்து கொலை செய்தல்), மற்றும் பிரிவு 341 ஆகியவற்றின் கீழ் 5 மாணவர்கள் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே,கடந்த புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவில்,மாணவி வீடு திரும்பும் போது 5 மாணவர்ளும் அவரைப் பின்தொடர்ந்து, வலுக்கட்டாயமாக சிறிது விஷத்தை வாயில் ஊற்றி குடிக்க வைத்தனர். மாணவி வீட்டை அடைந்ததும், வாந்தி எடுக்க ஆரம்பித்தார். அதன்பின்னர்,அம்மாணவி ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

இதனைத் தொடர்ந்து,மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.