13 பேருடன் காணாமல் போன விமானம் !5-வது நாளாக தேடும் பணி தீவிரம்

கடந்த ஜூன் 3 ஆம் தேதி அசாம் மாநிலத்தில் இருந்து அருணாச்சல பிரதேசத்திற்கு  இந்திய விமானப்படை விமானமான ஏ.என். 32 ரக விமானம் புறப்பட்டது.இந்த விமானத்தில் 8 விமானிகள் மற்றும் 5  பயணிகளுடன் சென்றனர்.பின் அருணாச்சல் பிரதேச வான்பகுதியில் காணாமல் போனது.
இந்நிலையில்  காணாமல்போன இந்திய விமானப்படையின் ஏ.என் -32 விமானத்தை தேடும் பணி 5 -வது நாளாக  தீவிரமாக நடைபெற்று வருகிறது . காணாமல் போன விமானத்தை தேடும் பணியில் விமானப்படையின் விமானங்கள் 5ம் நாளாக ஈடுபட்டுள்ளன.