கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட 4 மீனவர்களை இலங்கை நீதிமன்றம் விடுவித்தது.
எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்ததாக புகார் கூறி தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் சிறைபிடிப்பதும், பிறகு மீனவர்களை மட்டும் விடுவித்து படகுகளை அரசுடைமையாக்குவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
நிபந்தனை :
கடந்த 12ஆம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மீனவர்களை படகுடன் சேர்த்து இலங்கை ராணுவம் சிறைபிடித்தது. தற்போது கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை ஊர்காவல்துறை நீதிமன்றம் நிபந்தனையுடன் விடுதலை செய்துள்ளது.
படகு – அரசுடமை :
ஆனால், அவர்கள் மீன்பிடிக்க பயன்படுத்திய படகு அரசுடைமையாக்கப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. விடுவிக்கப்பட்ட மீனவர்கள் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் ஒப்படைக்கப்படுவர். அதன் பிறகு அவர்கள் இந்தியா திரும்புவார்கள்.