ராகுல் காந்திக்கு சிறை – மக்களவை தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஒத்திவைப்பு..!
ராகுல் காந்திக்கு சிறை – மக்களவை தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஒத்திவைப்பு..!
ராகுல் காந்தி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்ட நிலையில், மக்களைவை தொடங்கிய சில வினாடிகளிலேயே ஒத்திவைப்பு.
கர்நாடகாவின் கோலாறில் 2019 பொதுத்தேர்தல் பரப்புரையில், “எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறது” என ராகுல் காந்தி பேசியிருந்தார். இதனையடுத்து, ராகுலுக்கு எதிராக குஜராத் பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சூரத் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
பிரதமர் மோடி பெயர் பற்றி அவதூறு பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்தியை நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்துள்ளதோடு, 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மக்களவை ஒத்திவைப்பு
இந்நிலையில் மக்களவையில் ராகுல் காந்தி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனை அடுத்து மக்களவை தொடங்கிய சில வினாடிகளிலேயே ஒத்திவைக்கப்பட்டது. நண்பர்கள் 12:00 மணி வரை மக்களவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.