இராமாயணம் ,மகாபாரதத்தை ஒப்பிட்டு பேசிய தினேஷ் சர்மா..!

சோதனைக்குழாய்க் குழந்தை கருத்து ராமாயணக் காலத்திலேயே இருந்ததாகவும், சீதையின் பிறப்பு அதற்கோர் எடுத்துக்காட்டு என்றும் உத்தரப் பிரதேசத் துணை முதலமைச்சர் தினேஷ் சர்மா பேசியுள்ளார்.

இதழியல் தொடர்பான ஒரு கருத்தரங்கில் பேசிய தினேஷ் சர்மா, கூகுள் தேடுபொறியுடன் நாரதரை ஒப்பிட்டுக் கூறினார். நாரதர் அனைத்துத் தகவல்களையும் அறிந்தவர் என்றும், ஒரு செய்தியை அனைத்து இடங்களுக்கும் பரப்பியவர் என்றும் குறிப்பிட்டார்.

அதேபோல் நேரலை மகாபாரதக் காலத்திலேயே தொடங்கி விட்டதாகவும் மகாபாரதப் போர்க் காட்சிகளைத் திருதராஷ்டிரருக்குச் சஞ்சயன் விளக்கி எடுத்துக் கூறியதாகவும் குறிப்பிட்டார்.

அந்த வகையில் மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்துள்ளார். சீதை மண்பானையில் பிறந்ததாகக் கூறப்படுவதால், சோதனைக் குழாய்க் குழந்தை கருத்துரு ராமாயணக் காலத்திலேயே இருந்ததாகவும் தினேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment