கர்நாடக வனத்துறை அமைச்சர் மாரடைப்பால் காலமானார்!

கர்நாடக வனத்துறை அமைச்சர் உமேஷ் கட்டி 61 வயதில் மாரடைப்பால் காலமானார்.

கர்நாடக வனம் மற்றும் உணவு, சிவில் சப்ளை மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் உமேஷ் கட்டி 61 வயதில் மாரடைப்பால் நேற்று(செப் 6) காலமானார்.

உமேஷ் கட்டி தனது டாலர்ஸ் காலனி வீட்டில் மயங்கி விழுந்ததையடுத்து, பெங்களூரு ராமையா மருத்துவமனையில் உள்ள ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

சட்டமன்ற உறுப்பினரின் மறைவுக்கு முதல்வர் பசவராஜ் பொம்மை இரங்கல் தெரிவித்துள்ளார், இது மாநிலத்திற்கு மிகப்பெரிய இழப்பு என்று கூறினார்.

மேலும் இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த செய்தியால் வேதனை அடைந்தேன் என தெரிவித்துள்ளார்.

author avatar
Varathalakshmi

Leave a Comment