ஆப்கானிஸ்தானில் தொடங்கி டெல்லியில் முடிவடைந்தது..!

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, டெல்லியில் இன்று (புதன்கிழமை) லேசான நில அதிர்வு ஏற்பட்டது.

இதுகுறித்து ஏஎன்ஐ வெளியிட்ட செய்தியில், ”டெல்லி, காஷ்மீர், ஜம்மு ஆகிய மாவட்டங்களில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானில் 6.2 ரிக்டர் அளவில் இன்று ஏற்பட்ட நில நடுக்கத்தின் விளைவாக இந்த நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது” என்று செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக பாகிஸ்தானிலும்  இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.  இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவாகியது.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் கூற்றுபபடி, ஆப்கானிஸ்தான் தஜிகிஸ்தான் எல்லையில் இந்த நில நடுக்கத்தின் மையம் உருவாகியதாகவும். 111.9 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம்  ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment