அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் இணையதள சார்பு மீள் வாழ்வு மையம் – அமைச்சர்

ஊரடங்கை தடுக்க அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்.

சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஒமிக்ரான் தமிழ்நாட்டில் இதுவரை கண்டறியப்படவில்லை. ஊரடங்கை தடுக்க அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். அரசு ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 28 முதுகலை படிப்புக்கான சேர்க்கை இடங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது என்றும் கூறினார்.

இதனிடையே பேசிய அமைச்சர், இணையத்திற்கு அடிமையாகி தவிக்கும் சிறுவர்கள், மாணவர்களுக்கும் தொலைத்த வாழ்க்கையை மீண்டும் பெறுவதற்கு இணையதள சார்பு மீள் வாழ்வு மையம் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் தொடங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்