பெண் போலீசை கிண்டல் செய்த இருவர் சிறையில் அடைப்பு..!

பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசை கிண்டல் செய்த இருவர் கைது.

சென்னை முத்துராமலிங்க தேவர் குருபூஜையில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசை கிண்டல் செய்த இருவர் கைது செய்யப்பட்டனர். நந்தனத்தில் பெண் போலீசை கிண்டல் செய்த விஜயபாண்டி, தர்மேந்திரன் ஆகியோரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம், ஆபாசமாகப் பேசுதல் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

author avatar
murugan