டாஸ்மாக் கடை கூட்டத்தின் மத்தியில் பீர் வாங்கிய இளம்பெண்..!

டாஸ்மாக் கடையின் கூட்டத்திற்கு மத்தியில் இளம்பெண் ஒருவர் பீர் வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று குறைந்து வருகிறது. அதன் காரணமாக, கொரோனா பரவல் குறைவாக பாதிக்கப்பட்ட 27 மாவட்டங்களில் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து, மதுக்கடையில் பல மதுபிரியர்களின் மத்தியில் இளம்பெண் ஒருவர் போட்டி போட்டுகொண்டு மது வாங்கி சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், அந்த பெண்ணிற்கு முன்னுரிமை அளிக்க கோரி அருகில் உள்ளவர்களும் தெரிவித்துள்ளனர். அந்த பெண்ணும், மதுக்கடையில் தனக்கு குவாட்டர் வேண்டாம் பீர் வேண்டும் என்று கேட்டு வாங்கியுள்ளார். இதனை பார்த்த அருகில் இருந்தவர், எடுத்து செல்வதற்கு கைப்பை கொண்டு வந்தாயா என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண், நான் இதை கையிலேயே எடுத்து சென்று விடுவேன் என்று கூறியுள்ளார்.