தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 உயர்வு..!

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ரூ.37,112 க்கு விற்பனை.

பொதுவாக பெண்கள் தங்களது பணத்தை அதிகமாக முதலீடு செய்வது தங்கம் வாங்குவதில் தான். தென்னிந்தியாவில் அதிகமாக தங்கம் வாங்கும் மாநிலத்தில் தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது என்பது அனைவருமே அறிந்த ஒன்றுதான். மேலும் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் குறைந்து மற்றும் அதிகரித்துதான் வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக உயர்வுடன் காணப்பட்ட தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது ஆம், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ரூ.37,112 க்கு விற்பனை.ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,639-க்கு விற்பனை.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.