செப்டம்பர் 21 முதல் நேபாளத்தில் உள்நாட்டு விமானங்கள் இயக்கப்படுகிறது.!

செப்டம்பர் 21 முதல் நேபாளத்தில் உள்நாட்டு விமானங்கள் இயக்கப்படும் என விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் யோகேஷ் பட்டராய் அவர்கள் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் இந்தியா முழுவதிலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. ஆனால் கடந்த சில மாதங்களாகவே பல இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் இருந்தது. இந்நிலையில் தற்போது தான் அரசு மக்களுக்காக சில தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதில் ஒன்றாக போக்குவரத்துகள் தற்பொழுது அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வருகிற செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் நேபாளத்தில் உள்நாட்டு விமானங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான வாகன இயக்கத்தை மீண்டும் தொடங்க உள்ளதாக சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் யோகேஷ் பட்டராய் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், செப்டம்பர் 21 முதல் விமானங்கள் உள்நாட்டில் இயக்கப்படும். தனியார் துறையின் கோரிக்கைகளையும் பொது மக்களின் கோரிக்கைகளையும் அரசு ஏற்கவில்லை எனவும் அக்டோபர் 1ஆம் தேதி வரையிலும் விமானப் போக்குவரத்திற்கான தடை நீடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் மக்களுக்காக அரசு அறிவித்துள்ள தளர்வுகளில் ஒன்றாக விமானம் இயக்கப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
Rebekal