துப்பாக்கிச்சூட்டில் 13 உயிர்கள் சிந்திய ரத்தத்துக்கும் நீதி கிடைக்க வேண்டும் – உதயநிதி

துப்பாக்கிச்சூட்டில் 13 உயிர்கள் சிந்திய ரத்தத்துக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்று உதயநிதி தெரிவித்துள்ளார்.

வேதாந்த நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஆலையை திறக்க அனுமதியில்லை என்றும் வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்து மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.எனவே இது தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கூடாது என்ற சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது சென்னை உயர் நீதிமன்றம். மண்ணை காக்க தன்னெழுச்சியாக போராடிய தூத்துக்குடி மக்களுக்குக் கிடைத்த வெற்றி இது. எடப்பாடி ஏவிய துப்பாக்கிச்சூட்டில் 13 உயிர்கள் சிந்திய ரத்தத்துக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.