திருப்பூரில் 1 கிலோ கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைதி !

திருப்பூரில் 1 கிலோ கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைதி செய்யப்பட்டனர். 

திருப்பூரில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மே 17ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. திருப்பூரில் 114 பேருக்கு உறுதியான நிலையில் 112 பேர் குணமடைந்துள்ளனர். இன்னும் இரண்டு பேருக்கு மட்டுமே கொரோனா உள்ளது. 

இந்நிலையில், நேற்று திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த 3 பேரை விசாரிக்கையில் அவர்களிடம் 1 கிலோ கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைதி செய்து திருப்பூர் தெற்கு காவல் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 

author avatar
Vidhusan