மருத்துவர்களுடன் காணொலியில் முதலமைச்சர் ஆலோசனை.!

மருத்துவர்களுடன் காணொலியில் முதலமைச்சர் ஆலோசனை

கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு மே 3-ம் தேதி வரை ஊரடங்குநீடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

தமிழகத்தில் நேற்று 76 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1596 ஆக உயர்ந்துள்ளதாகவும், கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 635 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்கள், செவிலியர்களுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வர் பழனிசாமி காணொலியில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

author avatar
murugan