சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் நாடு முழுவதும் சுமார் 200 நாடுகளில் பரவியுள்ளது. நாளுக்கு நாள் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்த வண்ணம் உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகளை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. உலகளவில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,20,438 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,34,557 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தவர்களில் 4,56,736 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள். உலகளவில் அதிகபட்சமாக கொரோனா வைரசால் அமெரிக்காவில் 23,644, ஸ்பெயினில் 20,465, ஸ்பெயினில் 18,056, பிரான்ஸில் 14,967, பிரிட்டனில் 11,329 பேர் உயிரிழந்துள்ளார்கள் என்று குறிப்பிடப்படுகிறது.