#Coronavirus :ஒரு நாளில் 73 பேர் பலி !  3,694 பேர் அனுமதி ! 28,018 பேர் பாதிப்பு- கட்டுக்கடங்காமல் செல்லும் கொரோனா

கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது .ஹூபே மாகாணத்தில் நேற்று மட்டும் ஒரு நாளில்  73 பேர் பலியாகியுள்ளனர். இதனிடையே பலி எண்ணிக்கை 563  ஆக அதிகரித்துள்ளது.

ஹூபே சுகாதார மையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 28,018 அதிகரித்துள்ளதாகவும்  இதில்  3,694 பேர் நேற்று (பிப்ரவரி -5 ) புதியதாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியிட்டுள்ளது .இதில் நேற்று மட்டும் 73 பேர் பலியாகியுள்ளனர்.

சீனாவில் பல நகரங்களில் ஒவ்வொரு வீடுகளில் இருந்து வெளியேறும் நபர்களின் எண்ணிக்கைக்கு  கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது .மத்திய சீனாவில் உள்ள ஹூபே மாகாணம் கடந்த இரு வாரங்களாக பூட்டப்பட்ட நிலையில் தான் உள்ளது .இங்குள்ள ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளது .ஹூபே மாகாணதின் தலைநகர் வுஹானில் தான் இந்த வைரஸ் தாக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் உலகமுழுவதும் 31 நாடுகளை தாக்கியுயுள்ளது. இதில் இந்தியாவில் கேரளாவை சேர்ந்த 3 பேருக்கு  உறுதிசெய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .இவர்கள் 3 பெரும் சீனாவில் ஹூபே மாகாணத்தில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

 

author avatar
Castro Murugan