தாயை பார்க்க சென்றதால் மகளை டியூப் லைட்டால் அடித்த தந்தை..!

மதுரை மாவட்டம் கொடிமரத்தெருவை சார்ந்தவர் அப்துல்சமது,  இவரது மனைவி மும்தாஜி.இவர்கள் இருவரும் அடிக்கடி சண்டை நடப்பது வழக்கம்.கடந்த மாதமும் சண்டை போட்டுவிட்டு தனது தாய் வீட்டிற்கு மும்தாஜி சென்று விட்டார்.
மும்தாஜி உடன் தனது மகளை அப்துல்சமது அனுப்பாமல் தன்னுடன் வைத்து உள்ளார். இந்நிலையில் அரப்புஸ்ரா பள்ளி முடித்து விட்டு தனது தாய் மும்தாஜை பார்த்து விட்டு வீட்டிற்கு  வந்து உள்ளார்.
இதையறிந்த அப்துல்சமது தாயை பார்க்க சென்ற அரப்புஸ்ரா அடித்து உள்ளார்.வலி தாங்கமுடியாமல் வீட்டின் வெளிய ஒடி வந்து உள்ளார்.துரத்தி வந்த அப்துல்சமது தான் மகளை வீதி என்று கூட பார்க்காமல் கீழே தள்ளி கழுத்தில் மிதிக்கும் ,டியூப் லைட்டாலும் அடித்து உள்ளார்.
இதை தட்டி கேட்டவர்களையும் அரப்புஸ்ரா தாக்க வந்து உள்ளார்.வலி தாங்கமுடியாமல் சிறுமி துடித்ததை பார்த்த அப்பகுதி மக்கள் ஓன்று சேர்ந்து அரப்புஸ்ரா தாக்கினர். பின்னர்அரப்புஸ்ரா தப்பி ஓடிவிட்டார்.
அங்கு இருந்தவர்கள் கொடுத்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்து உள்ளனர்.தப்பி ஓடிய அரப்புஸ்ராவை போலீசார் தேடி வருகின்றனர்.
 

author avatar
murugan