டிக்கெட் பரிசோதகர்கள் போராட்டம் : 'நடத்துநராக பணிபுரிய கட்டாயபடுத்துகின்றனர்'

தமிழ்நாட்டில் போக்குவரத்து ஊழியர்கள் 5 வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளவர்களை அரசு பேருந்து இயக்க போக்குவரத்து துறை சார்பில் தற்காலிகமாக நியமிக்கப்பட்டு வருகின்றனர். அதனால் பல இடங்களில் விபத்துக்கள் ஏற்படுகின்றன. மேலும் டிக்கெட் பரிசோதகர்களை பேருந்தில் நடதுநர்களாக வேலைசெய்ய கூறிவருகின்றனர்.
இதனால் கோபமடைந்த கடலூர் மாவட்ட டிக்கெட் பரிசோதகர்கள் தங்களை கட்டாயபடுத்தி நடத்துநராக வேலைசெய்ய சொல்கிறார்கள் எனவும், பணி உயர்வு பெற்ற பிறகும் எங்களை நடத்துநராக பணிபுரிய கட்டாயபடுத்துகிறார்கள் என கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
source : dinasuvadu.com

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment