முகிலன் எங்கே ?என்ற கேள்விக்கு நேற்று விடைகிடைத்தது திருப்பதி ரயில்நிலையத்தில் தாடியுடன் இருந்த முகிலனை போலீசார் அவரை அழைத்து செல்லும் போது கோஷம் எழுப்பியவாறு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானது .
சந்தேகத்திற்கு இடமான நபர் தாடியுடன் இருப்பதை கண்ட ஆந்திர போலீசார் அவரை கைது செய்து அழைத்து சென்றனர். இந்த தகவலை அறிந்த தமிழக சிபிசிஐடி போலீசார் ஆந்திர போலீசை தொடர்பு கொண்டு முகிலன் பற்றி தகவலை அனுப்பி வைத்து அவரை தங்களிடம் ஒப்படைக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர் .
இதன் பின் காட்பாடி ரயில்நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட முகிலன் தமிழக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார் அதனையடுத்து சென்னையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்க்கு அழைத்து செல்லப்பட்டார் .
இதனை அறிந்த அவரது மனைவி பூங்கொடி ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் இருந்து சென்னைக்கு காரில் பயணித்து கொண்டிருந்த பொழுது கள்ளக்குறிச்சி அருகே கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானது .இதனால் லேசான காயமடைந்து அவர் பின்பு வேறொரு காரில் சென்னைக்கு புறப்பட்டு சென்றார் .