இரு குடோன்களிலிருந்து 848 கிலோ பயன்படுத்தப்பட்ட கையுறைகள்.., 3 பேர் கைது..!

டெல்லியில் இரு குடோன்களிலிருந்தும் 848 கிலோ பயன்படுத்தப்பட்ட அறுவை சிகிச்சை கையுறைகள் மீட்கப்பட்டன.

டெல்லியில் போலீசாருக்கு கிடைத்த தகவல்படி கிட்டத்தட்ட 848 கிலோகிராம் பயன்படுத்தப்பட்ட அறுவை சிகிச்சை கையுறைகள் இரண்டு கோடவுன்களில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.  கைது செய்யப்பட்ட மூன்று பேரும் பயன்படுத்தப்பட்ட கை கையுறைகளை மறுசுழற்சி செய்து விற்பனை செய்ததில் ஈடுபட்டனர்.

பயன்படுத்தப்பட்ட அறுவை சிகிச்சை கையுறைகள் ஸ்கிராப் டீலர்களிடமிருந்து சேகரிக்கப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டவர்கள் அவற்றைக் கழுவி புதிய பாக்கெட்டுகளில் அடைத்து பயன்படுத்தப்படாதவையாக விற்று லாபம் பார்த்து வர்ந்துள்ளனர்.

காவல்துறையினரின் கூற்றுப்படி, குற்றம் சாட்டப்பட்ட அருண் ஸ்ரீனிவாசன் (36), மணீஷ் குமார் (30), மற்றும் தினேஷ் குமார் ராஜ்புத் (28) ஆகியோர் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர். இரு குடோன்களிலிருந்தும் 848 கிலோ பயன்படுத்தப்பட்ட அறுவைசிகிச்சை கையுறைகள் மீட்கப்பட்டன. மேலும் இரண்டு  குடோன்களுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளன என போலீசார் தெரிவித்தனர்.

author avatar
murugan