அமெரிக்காவில் 83 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை!

அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பலியானோரின் எண்ணிக்கை 83 ஆயிரத்தை கடந்துள்ளது.

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து, பல நாடுகளை தாக்கி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் தீவிரமாக உள்ள நிலையில், இதனை முற்றிலுமாக அழிப்பதற்கு உலக நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. 

இந்நிலையில், இந்த கொரோனா வைரஸால் இதுவரை, உலக அளவில் 4,342,849 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 292,899 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் தாக்கத்தால்,  அதிகமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையிலும், பலியானவர்களின் எண்ணிக்கையிலும் முதலிடத்தில் இருப்பது அமெரிக்கா தான். 

இந்நிலையில், அமெரிக்காவில் இதுவரை, 1,408,636 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 83,425 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் நேற்று மட்டும் இந்த கொரோனா வைரஸால், 1,630 பேர் உயிரிழந்துள்ளனர். நாளுக்கு நாள் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை  அங்குள்ள மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.