உ.பியில் லாரி – பேருந்து மோதி 8 பேர் உயிரிழப்பு, 25 பேர் படுகாயம்.. நிவாரணம் அறிவித்தார் பிரதமர் மோடி!

உத்தரப்பிரதேசத்தில் லாரி – பேருந்து மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழப்பு, 25 பேர் படுகாயம்.

உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியில் 50 பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று லாரி மீது நேருக்கு நேர் மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில், 25 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தானது சாரதா ஆற்றின் பாலத்தில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தௌர்ஹாராவிலிருந்து லக்கிம்பூருக்குச் சென்று கொண்டிருந்த பேருந்து விபத்துக்குள்ளானது. காலை 7:30 மணியளவில், பஹ்ரைச் நோக்கிச் சென்ற பேருந்தும், லாரியும் ஈசா நகர் காவல் நிலையம் அருகே உள்ள பாலத்தில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 12 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. உ.பி., லக்கிம்பூர் கேரியில் நடந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு PMNRF-லிருந்து ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment