777 சார்லி – படத்தை பார்த்துவிட்டு கண்கலங்கிய கர்நாடக முதல்வர்…! என்ன காரணம்..?

777 சார்லி என்ற படத்தை பார்த்த கர்நாடக முதல்வர் கதறி அழுதார். 

கன்னட திரை துறையில் முன்னணி நடிகராக வலம் வரும் ரக்ஷித் ஷெட்டி, இயக்குனர் கிரண் ராஜ் இயக்கத்தில் 777 சார்லி என்ற படம் உருவாக்கப்பட்டது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா நடித்துள்ளார்.

இக்கதையின் முக்கிய அம்சம் என்னவென்றால் ஒரு நாய்க்கும் உறவுகளற்ற இளைஞனுக்கும் இடையே உள்ள உறவை பறைசாற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இப்படம் தமிழ் தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான நிலையில் மக்கள் மத்தியில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பாத்துள்ளார். இப்படத்தை பார்த்து இவர் கடந்த வருடம் தனது செல்லப்பிராணியை இழந்ததை நினைத்து கதறி அழுதுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment