மகாத்மா காந்தியின் 74-ஆவது நினைவு தினம்..! ஆளுநர் மற்றும் முதல்வர் மலர்தூவி மரியாதை!

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளனர்.

இன்று தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 74-ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளனர்.

இதனை தொடர்ந்து துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் போன்ற அரசியல் பிரபலங்களும் காந்தியின் சிலைக்கு மரியாதை செலுத்தியுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.