ராஜஸ்தானில் படகு கவிழ்ந்ததில் 7 பேர் உயிரிழப்பு..!

ராஜஸ்தானின் கோட்டா மாவட்டத்தில் சம்பல் ஆற்றில் இன்று காலை படகு கவிழ்ந்ததில் 7 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 14 பேர் காணவில்லை.  கவிழ்ந்த படகில் 25 முதல் 30 பேர் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விபத்து நடந்த இடம் பூண்டி மாவட்டத்திற்கு அருகில் உள்ளது.
தேசிய பேரிடர் மீட்பு படையும், மாநில பேரிடர் மீட்பு  படையும் அந்த இடத்தை அடைவதற்குள் படகில் இருந்தவர்களை மீட்க உள்ளூர் கிராமவாசிகள் காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர்.

காணாமல் போனவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை ஏழு உடல்கள் தண்ணீரிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்கள் பாதுகாப்பிற்காக ஆற்றின் மறு கரையில் சென்று இருக்கலாம் என்று போலீசார் கூறுகின்றனர்.

author avatar
murugan