புதுக்கோட்டை  அருகே வேன் மீது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழப்பு …!

புதுக்கோட்டை  அருகே வேன் மீது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 15 பேர்  கோவிலுக்கு சென்று விட்டு  வேனில் திரும்பி கொண்டிருந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே  நெடுஞ்சாலையில், வேன் மீது எதிரே வந்த கன்டெய்னர் லாரி மோதியது.
இந்த சம்பவத்தில் டிரைவர் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பாக காவல்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment