ஓடும் ரயிலில் உணவு சமைத்த பயணி.. சிலிண்டர் வெடித்து 65 பேர் பலி..!!

பாகிஸ்தானில் ரயில் கராச்சியில் இருந்து ராவல்பிண்டி நோக்கி சென்று கொண்டு இருந்தது ரயிலில் பயணித்த பயனர்கள் காலை உணவு சமைக்க ஒரு சிலிண்டரை திறந்த போது சிலிண்டர் வெடித்துள்ளது. காற்றின் வேகத்தால் மற்ற பெட்டி முழுவதும் தீ பரவியதால் பயனர்கள் அலறி அடித்து ஓடிய சிலர் தீ-லிருந்து இருந்து தப்பிக்க ஓடும் ரயிலில் இருந்து குதித்து உள்ளார்கள்.

இந்த விபத்தில் மொத்தம் 65 பேர் பலியாகி உள்ளனர். 50-க்கும் மேற்பட்டவர்கள் படு காயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.பாகிஸ்தானில் பயணிகள் உணவு சமைக்க ரெயில்களில் கேஸ் சிலிண்டர் மற்றும் அடுப்புகளை மறைத்து எடுத்து செல்கிறார்கள்.

author avatar
murugan