இன்று ஒரே நாளில் பாதிப்பு 646..! டிஸ்சார்ஜ் 611 .!

தமிழகத்தில், கொரோனா பாதிப்பிலிருந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை  9342 ஆக உயர்ந்துள்ளது. 

தமிழகத்தில் இன்று புதிதாய் 646 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால் மொத்த கொரோனா பாதிப்பு 17,728 ஆக உயர்ந்துள்ளது. இன்று 9 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 சென்னையில் இன்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 11,640 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை  9342 ஆக உயர்ந்துள்ளது.  இன்று ஒரே நாளில்  611 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 

author avatar
Dinasuvadu desk