6 வயது சிறுவன் சாம்பார் பாத்திரத்தில் விழுந்து உயிரிழப்பு..!

ஆந்திராவில் மழலையர் பள்ளி மாணவர் புருஷோத்தம் ரெட்டி, மதிய உணவு நேரத்தில் தனது தட்டை எடுக்க முயன்றபோது சாம்பார் பாத்திரத்தில் விழுந்து உள்ளார்.உடனே அந்த சிறுவனை பள்ளி ஆசிரியர்கள் உள்ளுர்  மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவரை கர்னூல் மாவட்ட பொது மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர்.
ஆனால் சிகிக்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தார்.இந்நிலையில்  புருஷோத்தமின் தந்தை சியாம்சுந்தர் ரெட்டியின் புகாரின் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 304 (கவனக்குறைவான செயலால் மரணத்தை ஏற்படுத்துகிறது) இன் கீழ் பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக பன்யம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பள்ளியில் அதிக ஆசிரியர்கள் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். இருப்பினும் உணவு பரிமாற தட்டுகளை எடுப்பதற்காகவும் , குழந்தைகளை வரிசையில் செல்வதை பார்பார்ப்பதற்கு நியமிக்கப்பட்ட அய்ரா, பீரம்மாவிடம் போலீசார்  கேள்வி எழுப்பினர்.
சூடான சாம்பாரைக் பாத்திரத்தில் இருந்து உடனடியாக சிறுவனை அழைத்துச் சென்றதாக பீரம்மா கூறினார். ஆனால் அவர் உடலில் உடனடியாக கொப்புளங்கள் உருவாக்கியது எனவும் கூறினார்.

author avatar
murugan