6 வயது சிறுவனுக்கு சாப்பிட ஒரு பிரட், உடுத்த ஒரு டயப்பர்… இப்படியும் ஒரு கொடூர தாய்…

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் தான் இப்படி ஒரு கொடுமை அரங்கேறியுள்ளது. தன் வளர்ப்பு மகன் ஜோர்டானை நினைத்துப்பார்க்காத அளவிற்கு கொடுமை செய்துள்ளார் அந்த தாய். 6 வயதுடைய அந்த சிறுவனுக்கு, நாள் ஒன்றுக்கு சாப்பிட ஒரு பிரட், உடுத்த ஒரே ஒரு டயப்பர் என கொடுத்து அவரது வளர்ப்பு தாய் கொடுமைப்படுத்தியுள்ளார்.
தம்மி ப்ளீமேயர் என்ற அந்த பெண்மணி, பிராட்லி ப்ளீமேயர் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். பிராட்லி ப்ளீமேயர்க்கு ஏற்கனவே ஜோர்டான் என்கிற 6 வயது மகன் உள்ளார். தம்மி ப்ளீமேயர் தன் வளர்ப்பு மகன் ஜோர்டானை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனை ஜோர்டானின் தந்தையும் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. மேலும், அவர் பங்குக்கு தன் மகனுக்கு அடிக்கடி மயக்க ஊசியை போட்டு கொடுமைப்படுத்தியுள்ளார்.
ஜோர்டான், இரவில் படிக்கட்டு அடியில் மட்டுமே உறங்க அனுமதித்த இந்த தம்பதி, உடலில் காயம் ஏற்படும் அளவிற்கு அடித்து துன்புறுத்தியுள்ளனர். இதனால் ஜோர்டானின் உடல் நிலை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. ஜோர்டானின் உடல் எடை வெறும் 14 கிலோ மட்டுமே இருந்தது.
இந்த கொடுமைகளை கவனித்து வந்த தம்மி ப்ளீமேயரின் மூத்த மகன் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீஸ் அந்த சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஜோர்டானைப் பரிசோதித்த மருத்துவர்கள், இன்னும் ஒரு சில நாட்கள் ஜோர்டான் இந்த கொடுமையை அனுபவத்திருந்தால் இறந்திருப்பார் எனக் கூறினர்.
தம்மி ப்ளீமேயர்-பிராட்லி ப்ளீமேயர் தம்பதியைக் கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஒப்படைத்தனர். தம்மி ப்ளீமேயர் மூத்த மகன் சாட்சி அளிக்க, இந்த கொடூர தம்பதிக்கு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார். தம்மி ப்ளீமேயருக்கு (தாய்க்கு) 28 ஆண்டுகள் சிறை தண்டனையும், பிராட்லி ப்ளீமேயருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment