ஈரானில் ஒரே நாளில் 54 பேர் பலி.. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,042ஆகவும் .. பலி எண்ணிக்கை 291 ஆக உயர்வு..

கொரோனா வைரஸ் சீனாவுக்கு அடுத்து ஜப்பான் மற்றும் தென்கொரியா , ஈரான் ஆகிய நாடுகளில் அதிக அளவில் பாதித்துள்ளது. ஈரானில் கடந்த 07-ம் தேதி ஒரே நாளில் 21 பேர் பலியானதால் பலி எண்ணிக்கை 145 ஆக உயர்ந்தது. பாதிப்பு எண்ணிக்கை 5,823 ஆகவும் இருந்தது. இதையெடுத்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 49 பேர் பலியாகி எண்ணிக்கை 194 ஆக உயர்ந்தது.

 ஈரான் நாட்டு அரசு சார்பில் வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது என கூறிய நிலையில் நேற்று ஒரே நாளில் 43 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில் இன்று ஒரே நாளில் 54 பேர் இறந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 291 ஆக உயர்ந்துள்ளது.மேலும் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 8,042ஆக உயர்ந்துள்ளது.

author avatar
murugan