மகாராஷ்டிராவில் 83,000 தாண்டுகிறது 5,37,124 பேருக்கு பரிசோதனை

 

கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் 2,739 பேருக்கு  கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது .எனவே மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 82,968ஐ எட்டியுள்ளது . இதில் 37,390 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு தற்போது குணமடைந்து வீடு திரும்புயுள்ளனர் . அங்கு  தற்போது வரை  கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,969 ஆக உயர்ந்துள்ளது . மகாராஷ்டிராவில் மட்டுமே 5,37,124 பேருக்கு கொரோனா தொற்றுக்கான பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதார துறை அமைச்சரான ராஜேஷ் டோப் தெரிவித்துள்ளார்.

author avatar
Castro Murugan