51 வயது முதாட்டி பாலியல் பலாத்காரம்.. காங்கிரஸ் எம்.எல்.ஏ கைது..,

திருவனந்தபுரம்: பாலியல் பலாத்காரம் வழக்கில் கேரளாவில், காங்., எம்.எல்.ஏ., கைது செய்யப்பட்டார். தற்கொலைக்கு முயற்சி கேரளாவில், கோவளம் தொகுதியில் இருந்து காங்., எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டவர் வின்சென்ட். நெய்யாற்றன்கரை என்ற பகுதியை சேர்ந்த 51வது பெண் தற்கொலைக்கு முயற்சி செய்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியது எம்.எல்.ஏ., வின்சென்ட் தான் என்ற புகாரில் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இருந்தனர். தற்போது கூடுதலாக, அவர் மீது பாலியல் பலாத்காரம் வழக்கு உள்ளிட்ட மேலும் சில பிரிவுகள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இது குறித்து கொல்லம் நகர போலீஸ் கமிஷனர் அஜிதா பேகம் கூறுகையில்,” எம்.எல்.ஏ., வின்சென்டிடம் விசாரணை நடத்துவது தொடர்பாக அனுமதி கேட்டு சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனிடம் மனு செய்யப்பட்டுள்ளது,” என்றார். இன்று மாலையில் எம்.எல்.ஏ., வின்சென்ட் கைது செய்யப்பட்டார். கேரள காங்., தலைவர் எம்.எம்.ஹசன் கூறுகையில், ” அவசியம் என்றால் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ய தயார் என வின்சென்ட் கூறியுள்ளார்,” என்றார்.

author avatar
Castro Murugan

Leave a Comment