#BREAKING: 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது.. அக்.12ல் விசாரணை! – உச்சநீதிமன்றம் அறிவிப்பு

500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் அக்.12-ஆம் தேதி விசாரணை.

நாட்டில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று விசாரிப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு விசாரணை நடத்துவதாக கூறப்பட்டது. இந்த நிலையில், 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் 2016 முடிவை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் அக்டோபர் 12-ஆம் தேதி விசாரணைக்கு வரும் என உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி 500 மற்றும் 1000 நோட்டுகளின் டெண்டரை மத்திய அரசு ரத்து செய்தது. அதன்படி நாடு முழுவதும் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் மூலம் நாட்டில் கருப்புப் பணத்தை ஒழிப்போம் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. பழைய 500 மற்றும் 1000 நோட்டுகளை வாபஸ் பெறுவதாக மத்திய அரசு அறிவித்த பிறகு இந்த முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதுதொடர்பான விசாரணையின்போது பணமதிப்பு நீக்கத் திட்டத்தின் பின்னணியில் உள்ள அரசின் நோக்கம் பாராட்டுக்குரியது என்றும் பொருளாதாரக் கொள்கையில் நாங்கள் தலையிட விரும்பவில்லை எனவும் உச்சநீதிமன்றம் அப்போது கூறியது.இதன் பின்னர் ​​அரசு மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை இடைக்கால உத்தரவு எதையும் வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இது தொடர்பாக நாட்டில் உள்ள பல்வேறு உயர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கும் உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இதனிடையே, அரசாங்கத்தின் பணமதிப்பிழப்பு திட்டத்தில் பல சட்டப் பிழைகள் இருப்பதாக மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டதையடுத்து, 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு இந்த வழக்கை அனுப்பப்பட்டது. இதற்காக 5 நீதிபதிகள் கொண்ட அமர்வை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது. இந்த நிலையில், ப 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை 6 ஆண்டுகளுக்குப் பிறகு, உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அக்டோபர் 12-ஆம் தேதி விசாரிக்கிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment