தூத்துக்குடியில் 135 கிலோ குட்கா கடத்தல்.! 5 பேர் கைது.! லாரி பறிமுதல்.!

தூத்துக்குடியில் 135 கிலோ குட்காவை கடத்த முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களின் கண்டெய்னர் லாரி மற்றும் இருசக்கர வாகனங்களும் கைது செய்யப்பட்டுள்ளது. 

குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் அரசால் தடைசெய்யப்பட்டுள்ளது. இருந்தும் அவை தமிழகத்தில் பல்வேறு கடைகளில் சட்டவிரோதமாக விறக்கப்பட்டு தான் வருகிறது. அதனை தடுக்க அரசு பல அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

அவ்வப்போது காவல்துறையினர் அதிரடி சோதனை செய்து சட்டவிரோதமாக கடத்தப்படும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து வருகிறது.

அப்படி தான், தூத்துக்குடியில் கன்டெய்னர் லாரி மூலம் 135 கிலோ குட்காவை ஒரு கும்பல் கடத்த முற்பட்டபோது அவர்களை கைது செய்து 135 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.

இதில் கடத்தலில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 135 கிலோ குட்கா மற்றும் கடத்தலுக்கு உபோயயோகப்டுத்திய கண்டெய்னர் லாரி மற்றும் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

 

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment