எம்எஸ் தோனி பெயரை பயன்படுத்தி மக்களை ஏமாற்றிய 5 பேர் கைது!

எம்எஸ் தோனியின் பெயர், புகைபடத்தை பயன்படுத்தி மக்களை ஏமாற்றியதாக பாட்னாவில் 5 பேர் கைது. 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் பெயரைப் பயன்படுத்தி மக்களை தொலைபேசியில் அழைத்து ஏமாற்றியதாக 5 பேர் பாட்னாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர் 2BHK குடியிருப்பில் இருந்து ஒரு (Dhani finance Ltd) என்ற போலி நிதி நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார்.

மேலும் மக்களுக்கு வங்கிக் கடன்கள், கிரெடிட் கார்டுகள், காப்பீடு மற்றும் KYC புதுப்பிப்புகள் போன்றவற்றை செய்து வந்ததாகவும், அவர்கள் தோனியின் பெயர் மற்றும் புகைப்படத்தையும் பயன்படுத்தியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் கவுதம் குமார், பரத் குமார், சோட்டு என்ற ஆகாஷ் சின்ஹா, ராஜீவ் ரஞ்சன் மற்றும் ஆகாஷ் குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று பாட்னாவின் மூத்த காவல் கண்காணிப்பாளர் (எஸ்எஸ்பி) மானவ்ஜீத் சிங் தில்லான் கூறினார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment