தமிழ் நடிகர் தனுஷ் தமிழ் சினிமா தாண்டி தற்போது ஹாலிவுட் வரை சென்று கலக்கிவுள்ளார். நடிகர் தனுஷ் தற்போது மாரி-2, எனை நோக்கி பாயும் தோட்டா, வடசென்னை ஆகிய படங்களில் நடித்து வருகின்றார்.
இப்படத்திற்கு பிறகு தேனாண்டாள் நிறுவனத்திற்காக தனுஷ் ஒரு படத்தை இயக்கவிருந்தது, என்ன காரணம் என்று தெரியவில்லை தேனாண்டாள் நிறுவனம் விலகிவிட்டது.
தற்போது தனுஷே அப்படத்தை தயாரித்து இயக்கவுள்ளாராம், இப்படத்தின் மூலம் தனுஷ் மிக கடுமையான ரிஸ்க் ஒன்றை எடுக்கவுள்ளார்.
ஆம், இப்படத்தின் கதை 400 வருடங்கள் பின்நோக்கி இருக்குமாம், இதற்காக பிரமாண்டமாக செட் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.