மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சிறப்பு மருத்துவமனை சென்னையில் இன்று திறப்பு !

மூன்றாம் பாலினத்தவர்களும் மற்ற நோயாளிகளைப் போல உயர்தர மருத்துவ சிகிச்சையை பெறுவதற்கு தமிழக அரசு சார்பில் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை மற்றும் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் பல்நோக்கு சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது.
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக சுதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.மேலும், இங்கு ஒட்டுறுப்பு சிகிச்சை , நாளமில்லா சுரப்பி பிரிவு, பால்வினை நோய் பிரிவு மற்றும் மனநல நோய்களுக்கான பிரிவி ஆகியவை இங்கு செயல்படும் என்றும் தெரிவித்துள்ளார்.